கார் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு

கார் மீது லாரி மோதி 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

மதுரை பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (35). நெய்வேலி மந்தாரக் குப்பம் தனியார் வங்கி துணை மேலாளர். அதே வங்கியில் அலு வலக உதவியாளர் ரகுவரன் (30). இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. சிகிச்சை தொடர்பாக அஜய், ரகுவரன் மற்றும் அவரதுதம்பி ரங்கராஜன் (32) ஆகிய 3 பேரும் காரில் நேற்று முன் தினம் புதுச்சேரிக்கு சென்று டாக்டரை சந்தித்து விட்டுநேற்று முன்தினம் நள்ளிரவு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அஜய் ஓட்டினார். மந்தாரக்குப்பம் பகுதியில் சேப்ளாநத்தம் அருகே எதிரே சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் அஜய்,ரகுவரன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரங்கராஜன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in