கிருஷ்ணகிரியில் மறியல் அரசு ஊழியர்கள் கைது

கிருஷ்ணகிரியில் மறியல் அரசு ஊழியர்கள் கைது
Updated on
1 min read

கிருஷ்ணகிரியில் 9-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், நேற்று 9-வது நாளாக மறியல் போராட்டம் நடந்தது. மீன் வளத்துறை ஊழியர் சங்க மாநில பொருளாளர் நந்தகுமார் தலைமை வகித்தார்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், மாவட்ட செயலாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் தேவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 27 பெண் ஊழியர்கள் உட்பட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in