திரிபுராவை சேர்ந்தவர் செல்போன் கொள்ளை வழக்கில் கைது

திரிபுராவை சேர்ந்தவர் செல்போன் கொள்ளை வழக்கில்  கைது
Updated on
1 min read

ரூ.15 கோடி செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் திரிபுராவைச் சேர்ந்த மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து மும்பைக்கு ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றி சென்ற லாரியை மேலுமலை அருகே மர்ம கும்பல் கடத்தி, அதில் இருந்த செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றது. இக்கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 8 பேரை, சூளகிரி போலீஸார் கைது செய்தனர். 2 பேர் ஓசூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

இந்நிலையில் இக்கொள்ளை யில் தொடர்புடைய திரிபுராவை சேர்ந்த வினோத் தேஜ்வாணி (60) என்பவர் துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர். இவர் இவ்வழக்கில் ஏற்கெனவே கைதாகி உள்ள பரத் தேஜ்வாணியின் தந்தை. கைதான வினோத் தேஜ்வாணியை போலீஸார் ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in