காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்கும்‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் தொடக்கம்

காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்கும்‘ஆபரேஷன் ஸ்மைல்’ திட்டம் தொடக்கம்
Updated on
1 min read

இத்திட்டம், திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தொடங்கி வைத்தார். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். இதுகுறித்து மாவட்ட காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "இக்கட்டான சூழல்களில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். காணாமல்போன குழந்தைகளே இல்லை என்ற இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில், இத்திட்டத்தின் கீழ் அனைவரும் பணிபுரிகின்றனர்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in