கடலூரில் 7-வது நாளாக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி 7-வது நாளாக கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர்  மறியலில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி 7-வது நாளாக கடலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

கடலூரில் நேற்று 7-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி

கடலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட இணை செயலாளர் ராமவெங்கடாஜலபதி, மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் புருேஷாத்தமன், மாவட்ட தலைவர் காசிநாதன், மாவட்ட செயலாளர் ராமநாதன், முன்னாள் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதே போல் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் எதிரில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in