அரசு ஊழியர் சங்கத்தினர் நூதன போராட்டம்

அரசு ஊழியர் சங்கத்தினர் நூதன போராட்டம்
Updated on
1 min read

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அகவிலைப்படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட 41 மாத காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்க வேண்டும், அரசுத்துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் 6-வது நாளாக நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டதலைவர் ராணி தலைமை வகித்தார்.

கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில் கண்களில் கருப்பு துணி கட்டியும், தராசுகளை கைகளில் ஏந்தியவாறும், பாடையில் ஒருவரை படுக்கவைத்து ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, 93 பெண்கள் உட்பட 143 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in