அணையில் மூழ்கி ராணுவ வீரர் உயிரிழப்பு

அணையில் மூழ்கி ராணுவ வீரர் உயிரிழப்பு

Published on

குன்னூர் ராணுவ முகாமில் பணிபுரிந்து வந்த துர்லா பட்டாசாரியா (37) நேற்று மதியம் குடும்பத்துடன், உதகை அருகே எமரால்டு அணைப் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அணையில் குளிக்க சென்ற துர்லா பட்டாசாரியா, நீரில் மூழ்கினார்.

குடும்பத்தினரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், எமரால்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீஸார், சம்பவ பகுதிக்கு சென்றனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் ஒரு மணி நேரம்தேடி, துர்லாபட்டாசாரியாவின் உடலை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in