குறிஞ்சிப்பாடியில் நாளை திமுக செயற்குழு கூட்டம் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்

குறிஞ்சிப்பாடியில் நாளை திமுக செயற்குழு கூட்டம் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தகவல்
Updated on
1 min read

கடலூர் கிழக்கு மாவட்ட திமுகசெயற்குழுக் கூட்டம் குறிஞ்சிப்பாடியில் நாளை நடைபெறு கிறது.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுகசெயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:

குறிஞ்சிப்பாடியில் உள்ள திமுக அலுவலகத்தில் நாளை(பிப்.9) மதியம் 12 மணியளவில் நடைபெ றும் செயற்குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில் சிதம்பரம் புறவழிச் சாலையில் கலைஞர் திடலில் வரும் 13-ம் தேதி மதியம் திமுக தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளது குறித் தும், மார்ச் 1-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண் டாடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது என்று தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in