கடலூர் மத்திய சிறையில் போலீஸார் சோதனை

கடலூர் மத்திய சிறையில் போலீஸார் சோதனை
Updated on
1 min read

கடலூர் மத்திய சிறையில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர்.

கடலூர் கேப்பர்குவாரி மலை பகுதியில் உள்ள மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1,000 பேர் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் செல்போன்களை மறைத்து வைத்து பயன்படுத் துவதை தடுக்கும் வகையில் போலீஸார் அடிக்கடி சோதனை மேற்கொள்வார்கள்.

இந்த நிலையில் நேற்று சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தலைமையில் சிறை கண்காணிப்பாளர் நிகிலா, கடலூர் டிஎஸ்பி சாந்தி, 2 காவல் ஆய்வாளர்கள், 100-க்கும் மேற்பட்ட போலீஸார் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in