Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடியில் வேலைவாய்ப்பு முகாம் இன்றும் நடைபெறும்

திருவள்ளூர்

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடி செக்போஸ்ட் அருகில் உள்ள திடலில் 2 நாள் வேலைவாய்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆவடி ச.மு.நாசர் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த இலவச வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ், ராயல் என்ஃபீல்டு, ஃபாக்ஸ்கான், பேடிஎம் உள்ளிட்ட 120 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

முதல் நாளான நேற்று இம்முகாமில் 2,500 பேர் பங்கேற்றனர். அதில், 1,500 பேருக்கு பணி ஆணைவழங்கப்பட்டது. இன்றும் இந்தவேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் மூலம், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x