

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 3 இடங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட கிளை சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.
கடலூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு குளோப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் செந்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 3 இடங்களிலும் சாலை மறியல் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
இதேபோல் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் எதிரேநேற்று விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
புதுச்சேரி