தேனி அருகே லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

தேனி அருகே லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

தேனி மாவட்டம், ராசிங்காபுரத்தைச் சேர்ந்த அன்பழகன் மகன் பூபதிராஜா(20). இவர் நேற்று தனது தாயார் முருகேஸ்வரியுடன்(40) இரு சக்கர வாகனத்தில் தேனிக்குச் சென்று கொண்டிருந்தார். பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த போர்வெல் லாரி இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த பூபதிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முருகேஸ்வரி ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லாரி ஓட்டுநர் மூர்த்தி(21) மீது வழக்குப்பதிவு செய்து பழனிசெட்டிபட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in