வீட்டு உபயோகத் துணி உற்பத்தி தொழில் திருப்பூரில் இன்று ஆலோசனைக் கூட்டம்

வீட்டு உபயோகத் துணி உற்பத்தி தொழில் திருப்பூரில் இன்று ஆலோசனைக் கூட்டம்
Updated on
1 min read

திண்டுக்கல் தொழிலாளர் துறை இணை ஆணையர் கோவிந்தன் தலைமையிலான இக்குழுவில் தொழிலாளர் துறை, புள்ளியியல் துறை அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் இன்று (பிப்.5) நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் (டாஸ்மா) உட்பட பல்வேறு ஜவுளி அமைப்பு பிரதிநிதிகள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

திருப்பூர் பகுதி ஜவுளி உற்பத்தி தொழிலாளர்கள் பங்கேற்று, கருத்துகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கைகளை மனுவாக அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 90259-24954 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in