Published : 04 Feb 2021 03:14 AM
Last Updated : 04 Feb 2021 03:14 AM

தொழிலாளர் சட்ட திருத்த நகல் எரிப்பு போராட்டம்

தொழிலாளர் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி, தேனி பேருந்து நிலையம் அருகே நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டச் செயலாளர் எம். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தலைவர் சி.முருகன், பொருளாளர் என். ரவிமுருகன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் ஆலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுத் துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது சட்ட நகலை எரிக்க முயன்ற 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x