காவேரிப்பட்டணம் அருகே சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே   சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

காவேரிப்பட்டணம் அருகே சாலையோரம் நின்றிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார், லிங்கா, சுரேந்தர், பிரசாந்த், கவுதம், பரணி, அசோக். இவர்கள் 7 பேரும் காரில் நேற்று இரவு பவானியில் இருந்து பெங்களூருவுக்கு சென்றனர்.

பூபதி என்பவர் காரை ஓட்டினார். நேற்று அதிகாலையில் காவேரிப்பட்டணம் அருகே இவர்களது கார் வந்தபோது, பெங்களூரு நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அப்பேருந்து பயணி தேவராஜ் என்பவர், கீழிறங்கி சாலையைக் கடக்க முயன்றுள்ளர்.

அப்போது எதிர்பாராதவிதமாக 7 பேர் பயணித்த கார், தேவராஜ் மீது மோதி நிலைதடுமாறி அரசு பேருந்தின் பின்புறம் மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பூபதி, சிவக்குமார், லிங்கா, சுரேந்தர், பிரசாந்த் மற்றும் சாலையைக் கடக்க முயற்சித்த தேவராஜ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர்கள் வெங்கடாசலம், அறிவழகன் மற்றும் போலீஸார் காயம் அடைந்த கவுதம், பரணி, அசோக் உள்ளிட்ட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in