Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் நிறைவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்த சரஸ் புஷ்கரணியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த தெப்ப உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் ‘அனந்த சரஸ்’ எனப்படும் புஷ்கரணியில் உலகப் புகழ் பெற்ற அத்திவரதர் சயனித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 28-ம் தேதி முதல் 3 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில், 3-ம் நாளான நேற்று இரவு, புஷ்கரணியில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தெப்பத்தில் பெருந்தேவி தாயார் மற்றும் தேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், தீர்த்தக் குளத்தில் 7 சுற்றுகள் தெப்பத்தில் வரதராஜ பெருமாள் வலம் வந்தார். கரோனா தொற்று காரணமாக பக்தர்கள் குளத்தில் இறங்கத் தடை விதிக்கப்பட்டது. எனினும், கரையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையிலான கோயில் பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x