Published : 31 Jan 2021 03:14 AM
Last Updated : 31 Jan 2021 03:14 AM

கடன் தொல்லையால் புது மாப்பிள்ளை தற்கொலை

விருதுநகர் அருகே கடன் தொல்லை யால் புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் பேராலி சாலையைச் சேர்ந்தவர் கார்த்திக் 5மாரீஸ்வரன்(29). கேட்டரிங் சர்வீஸ் செய்து வந்தார். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. அப்போது, ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கு வட்டிகூட செலுத்த முடியாமல் கார்த்திக் மாரீஸ்வரன் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாண்டியன் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x