தானிப்பாடி பகுதியில் 3 நாட்களுக்கு மின் நிறுத்தம்

தானிப்பாடி பகுதியில் 3 நாட்களுக்கு மின் நிறுத்தம்
Updated on
1 min read

மத்திய அரசின் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி துணை மின் நிலையத்தில் மின் கம்பம் மற்றும் மின் கம்பியை மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், தானிப்பாடி, மல மஞ்சனூர், தேவரடியார்குப்பம், வேப்பூர் செக்கடி, ஆண்டாப் பட்டு, டி.வேலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும், மலையனூர் செக்கடி துணை மின் நிலையத்தில் உட்பட்ட கிராமங்களில் வரும் 2-ம் தேதி, 4-ம் தேதி மற்றும் 6-ம் தேதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in