மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவுவதாகக் கூறி, மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் இடுவாய் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இடுவாய் ஊராட்சி சீராணம்பாளையம் கிளைச் செயலாளர் க.ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சி மன்ற தலைவருமான கே.கணேசன் உள்ளிட்டோர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in