Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM

2.80 லட்சம் குழந்தைகளுக்குநாளை போலியோ சொட்டு மருந்து

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை ஒழிக்கும் வகையில், நாளை (ஜன.31) திருப்பூர் மாவட்டத்தில் 1154 மையங்களில் காலை 7 முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் முகாமில், ஒன்று முதல் 5 வயதுக்கு உட்பட்ட 2.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், சுங்கச்சாவடிகள், தனியார் சொட்டு மருந்து முகாம்கள் ஆகிய இடங்களில் சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x