Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

பொன்னேரி அருகே வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் ஜோதி தரிசனம்

பொன்னேரி அருகே சின்னகாவனம் வள்ளலாரின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊராகும். இங்குள்ள சின்னம்மையார் இல்லத்தில், வள்ளலார் தாயார் அறக்கட்டளை சார்பில் வள்ளலார் சொற்பொழிவு, மருத்துவ முகாம், யோகா பயிற்சி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில் நேற்று தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில், காலை 5.30 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதப்பட்டது. காலை 8 மணிக்கு சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x