Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

புதுச்சேரியில் 39 பேருக்கு கரோனா ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று தெரிவித் ததாவது:

புதுச்சேரி மாநிலத்தில் 2,772 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 21, காரைக்காலில் 5, ஏனாமில் 2, மாஹேவில் 11 என மொத்தம் 39 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் காரைக்கால் லக்ஷ்மி நகரைச் சேர்ந்த 74 வயது முதியவர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை 647 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தை பொருத்தவரை தற்போது வரை 38,973 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மருத்துவமனைகளில் 100 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 191 பேரும் என மொத்தம் 291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38,035 (97.59 சதவீதம்) ஆக உள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x