டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் அமைதியாக டிராக்டர் பேரணி நடத்திய அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் தம்புசாமி, திமுக பாரதி உள்ளிட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் ஜவான் பவன் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, குடியிருப்போர் சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in