Published : 29 Jan 2021 03:14 AM
Last Updated : 29 Jan 2021 03:14 AM

சிறுமிக்கு பாலியல் தொந்தரவுமுதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

தேனி: கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பழைய நூலகத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன்(60). இவர் கடந்த 2017-ம் ஆண்டு இப்பகுதியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.

மனோகரன் மீது உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போக்ஸோ சட்டத்தில் மனோகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜேஸ்வரி வாதாடினார். விசாரணை முடிந்த நிலையில் மனோகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி வெங்கடேசன் உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமியின் படிப்பு மற்றும் எதிர்காலத்துக்காக தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x