Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

ஊராட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

`மக்கள் நலன் கருதி கிராம நிர்வாக அடங்கல் மற்றும் அனைத்து ஆவணங்களும், ஊராட்சி தலைவர் நிர்வாகத்துக்கு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசின் அனைத்து வேலைக்கான ஒப்பந்தங்களை கிராம நிர்வாகத்தின் தலைமை யில் கிராம சபையின் தீர்மானத்தின் அடிப்படையில் நடைமுறைப் படுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகத்தில் பேக்கேஜ் ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். கிராம நிர்வாகத்துக்கு அதிக அதிகாரம் மற்றும் நிதி வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி, கோவில்பட்டியில் கிராம ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பு தலைவர் ரா.ரத்தினவேல் தலைமை வகித்தார். ஆலோசகர் ரா.உத்த ண்டராமன், ஆவல்நத்தம் ஊராட்சி தலைவர் மா.காளியம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x