விவசாயி வீட்டில்35 பவுன் நகை திருட்டு

விவசாயி வீட்டில்35 பவுன் நகை திருட்டு
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தரணிபாலன். இவர், கடந்த 26-ம் தேதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்னையில் நடைபெற்ற மகளின் திருமணத்துக்கு சென் றுள்ளார்.

பின்னர், அவர் நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in