Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM
திருப்பத்தூர்/ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் அடுத்த பசிலிக்குட்டை முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கவசத்தில் முருகப்பெருமான் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். தைப்பூச திருவிழாவையொட்டி திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, குரிசிலாப்பட்டு, ஜோலார்பேட்டை, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். கரோனா ஊரடங்கால் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
அதேபோல, ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி அருகேயுள்ள சுப்பிரமணிசுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி நேற்று பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில், 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், நாராயணபுரம் மயில்பாறை முருகன் கோயில், திருப்பத்தூர் டவுன் தண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூச திருவிழாவை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதேபோல, ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு ஞானமலை முருகன் கோயில், கடாம்பூர் முருகன் கோயில், கைலாசகிரி நாதர் முருகன் கோயில், பச்சக்குப்பம் மயிலாடும் மலை முருகன் கோயில், ஆம்பூர் நாகநாதசுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூசி திருவிழா வெகுவிமரிசயைாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தைப்பூச திருவிழாவைக் காண முருகன் கோயிலுக்கு திரண்டு, பால் குடம் ஊர்வலம், காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT