திருவள்ளூர் அருகே மர கிடங்கில் தீ விபத்து

திருவள்ளூர் அருகே மர கிடங்கில் தீ விபத்து
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் பகுதியில் மர கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மரங்கள் தீக்கிரையாகின.

திருவள்ளூர் அருகே குத்தம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரம் மற்றும் பிளாஸ்டிக்காலான பேலட்டுகள் வைக்கும் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கின் நேற்று மதியம்திடீரென தீப்பற்றி, மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி, திருவள்ளூர், திருவூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரத்துக்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் உள்ளிட்டவை தீக்கிரையானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, வெள்ளவேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in