சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூரைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் ஊமையன் என்கிற ராஜ்குமார் (23). பக்கத்து வீட்டை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி அன்று வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, ராஜ்குமாரின் கையில் கடித்து விட்டு, அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ஓடிச்சென்று நடந்த சம்பவம் பற்றி கூறி அழுதுள்ளார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் தாய் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசிஇவ்வழக்கில் ராஜ்குமாருக்கு, 5 ஆண்டுசிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்புவழங்கினார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் அரசுவழக்கறிஞர் கலாச் செல்வி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in