Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM

முதுகுளத்தூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

முதுகுளத்தூரில் கஞ்சா வழக்கில் தொடர்புடையவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், வீரசோழனைச் சேர்ந்த சுடலை மகன் செல்வராஜ் (34). இவர் உள்ளிட்ட சிலர் ஆயுதங்களுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டபோது, முதுகுளத்தூர் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. இ.கார்த்திக் பரிந்துரைத் தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், செல்வராஜை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதனையடுத்து முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் மோகன், செல்வராஜை கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x