காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஜன.19 கொடியேற்றத்துடன் தைப்பூச விழா தொடங்கியது. தினமும் சுவாமி, அம்பாளுடன் பல் வேறு வாகனங்களில் வீதி உலா சென்றனர். ஒன்பதாம் நாளான நேற்று காலை தேரோட்டம் தொடங்கியது. சொர்ணகாளீஸ்வரர் எழுந்தருளிய பெரிய தேரை ஆண் பக்தர்களும், சொர்ணவல்லி அம்மன் எழுந்தருளிய தேரை பெண் பக்தர்களும், விநாயகர் எழுந்தருளிய சிறிய தேரை சிறுவர்களும் இழுத்தனர். நான்கு ரத வீதிகளைச் சுற்றி வந்து தேர்கள் நிலையை அடைந்தன. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று தீர்த்தவாரி, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. இரவு சுவாமி புறப்பாடுடன் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in