Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
தமிழகத்துக்கு `தமிழ்நாடு' என பெயர் சூட்டக் கோரி விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரின் 126-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி விருதுநகரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்கள ராமசுப்ரமணியன், கோட்டாட்சியர் முருகேசன் (அருப்புக்கோட்டை) துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, வட்டாட்சியர் முத்துசெல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT