Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
வாடிப்பட்டியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டை யுடன் கூடிய தேங்காய் ஏலம், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி நேற்று நடந்த ஏலத்தில் 14 விவசாயிகளின் 46,823 தேங் காய்கள் ஏலம், மதுரை விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் நடைபெற்றது. இதில் 7 வியாபாரிகள் பங்கேற்றனர்.
ஏலத்தில் அதிகபட்ச விலையாக ரூ. 11.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 7.80-க்கும் சராசரியாக ரூ. 8.52-க்கும் காய்கள் ஏலம் போயின. மேலும் ரூ.3.99 லட்சம் உடனடியாக வியாபாரிகளிடம் இருந்து பெற்று விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது.
மேலும் தகவலுக்கு மேற் பார்வையாளர் சீனிகுருசாமியை செல்போன் எண்- 9600802823-ல் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT