

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து, சேலத்தில் தடையை மீறி மத்திய தொழிற்சங்கத்தின் கூட்டு இயக்கம் சார்பில் விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.
சேலத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாநகர காவல் துணை ஆணையர் சந்திரசேகரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் தடுப்புகள் அமைத்து நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திட்டமிட்டபடி மத்திய தொழிற்சங்க கூட்டு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்கள் மூலம் பேரணியாக புறப்பட்டு சேலம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். அப்போது, புதிய வேளாண் சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணி ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டிம் அருகே வந்தபோது, போலீஸார் தடுத்தனர். இதையடுத்து, விவசாயிகள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
அதேபோல, சேலம் முள்ளுவாடி கேட்டில் இருந்து டிராக்டர்களில் விவசாயிகள் பேரணியாக நாட்டாண்மை கழகம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
நாமக்கல்
தடையை மீறி இரு சக்கர வாகனத்தில் விவசாயிகள் பேரணி செல்ல முயன்றனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல் துறையினர் மற்றும் விவசாயிகளிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து பேரணி செல்ல முயன்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி பெருமாள், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் உள்பட 11 பேரை காவல் துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
தருமபுரி
ஓசூர்