Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றவில்லையென ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

தருமபுரி அடுத்த வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் குடியரசு தினமான நேற்று தேசியக் கொடி ஏற்றவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி ஒன்றியத்தில் உள்ளது வெள்ளாளப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக மீனாட்சி என்பவர் உள்ளார். குடியரசு தினமான நேற்று தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் குடியரசு தின விழாவுக்காக தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்யவில்லை என அந்த ஊராட்சியைச் சேர்ந்த சிலர் ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் 1077 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளாளப்பட்டி ஊராட்சித் தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x