Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

விபத்தில் ஆய்வக உதவியாளர் உயிரிழப்பு

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் ராஜேஷ்கண்ணா(40). பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணி யாற்றி வந்த இவர், நேற்று பணிமுடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

பெரம்பலூர்-துறையூர் சாலையில், செஞ்சேரி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இவரது இரு சக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேஷ்கண்ணா அந்த இடத்தி லேயே உயிரிழந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x