Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM

புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

கோவில்பட்டி: சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கோவில்பட்டி கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ஜே.விஜயா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக பணியாற்றிய வ.சங்கரநாராயணன் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று காலை பொறுப்பேற்றார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள சங்கரநாராயணன் திருநெல்வேலி மாவட்டத்தில் வருவாய்த்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி, கடந்த 2018-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x