Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில்குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
ஆட்சியர் மா.அரவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறப்பாக பணியாற்றிய 63 காவலர்களுக்கு தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். மேலும் பணியில் சிறப்பிடம் பெற்ற அரசு அலுவலர்கள் 34 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
விபத்தின்றி 20 ஆண்டுகள் பணியாற்றியதற்காக 6 ஓட்டுநர்களுக்கு தங்கப்பதக்கம், 10 வருடம் சிறப்பான பணிக்காக இரு ஓட்டுநர்களுக்கு ரூ.500 மதிப்பிலான சிறுசேமிப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் எஸ்.பி. பத்ரிநாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஷரண்யா அறி, நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பயிற்சி உதவி ஆட்சியர் ரிஷாப், எம்எல்ஏக்கள் சுரேஷ்ராஜன், மனோ தங்கராஜ் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT