Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
நாகர்கோவில்: பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோயில் தைத்திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9.15 மணியளவில் விநாயகர், பூதலிங்க சுவாமி, அம்பாள் திருத்தேரில் எழுந்தருளலும், பின்னர் தேரோட்டமும் நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான நாளை (28-ம் தேதி) காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு ஆராட்டு வைபவம் நடைபெறுகிறது.
திருமலை திருப்பதி
கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாசலபதி கோயில் கும்பாபிஷேகம் 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி நடைபெற்றது. வருஷாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு புண்ணியாகவாசனம், சப்தகலச பூஜை நடைபெறுகிறது. பகல் 11 மணிக்கு யாகசாலை பூஜை, அபிஷேகம், 12 மணிக்கு பூர்ணாகுதி, அலங்கார பூஜை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாராவ், செயல் அலுவலர் அனில்குமார் செய்துள்ளனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT