Published : 27 Jan 2021 03:18 AM
Last Updated : 27 Jan 2021 03:18 AM
தூத்துக்குடி: திருச்செந்தூர் செந்திலாண்டவர் சுவாமி கோயிலில் 40 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.24 கோடி கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் சுவாமி கோயில் உண்டியல்கள் மாதம் இருமுறை எண்ணப்படுகின்றன. கடந்த 20-ம் தேதி உண்டியல் எண்ணப்பட்டபோது, ரூ. 2.47 கோடி கிடைத்தது. இதில் எண்ணப்படாத உண்டியல்கள் நேற்றுமுன்தினம் எண்ணப்பட்டன. கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமை வகித்தார். இதில் ரூ.77 லட்சத்து 6 ஆயிரத்து 634 ரொக்கம், தங்கம் 374 கிராம், வெள்ளி 3,300 கிராம், அயல் நாட்டு கரன்சிகள் 68 கிடைத்தன. கடந்த 40 நாட்களில் ரூ.3 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 245 ரொக்கம், தங்கம் 1,503 கிராம், வெள்ளி 24,546 கிராம் கிடைத்தன. வெளிநாட்டு கரன்சிகள் 105 கிடைத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT