ஏடிஎம் கார்டை பறித்து விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு

ஏடிஎம் கார்டை பறித்து  விவசாயியிடம் ரூ.40 ஆயிரம் திருட்டு
Updated on
1 min read

திம்மசமுத்திரத்தைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரன், இவர் கடந்த 16-ம் தேதி காஞ்சி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கத் தெரியாமல் தவித்துள்ளார்.

அப்போது அருகில் நின்ற நபர் உதவிக்கு வந்துள்ளார். அவர் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து, பின்னர் பணம் வரவில்லை எனச் சொல்லி போலியான ஏடிஎம் கார்டை சந்திரனிடம் கொடுத்துவிட்டு உண்மையான கார்டுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த கார்டை பயன்படுத்தி, அந்த நபர் ரூ.40 ஆயிரத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாஞ்சி போலீஸார் ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, எஸ்பிஐ வங்கி அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

அவர் தக்கோலம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பதும், அவர் இதுபோல் பல இடங்களில் ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடியதும் தெரியவந்தது, ஏழுமலையை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in