சிதம்பரம் மருத்துவக்கல்லூரி கல்விக் கட்டண விவகாரம் 48-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு முதுகலை மாணவர்கள் பாடம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு முதுகலை மாணவர்கள் பாடம் நடத்தினர்.
Updated on
1 min read

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று 48-வது நாளாக போராட் டம் நடத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி அரசு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஆனால் மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்விக் கட்டணம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படுவதில்லை. அரசு கல்லூரிக் கட்டணமே வசூலிக்க வலியுறுத்தி நேற்று 48- வது நாளாக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாணவர்களுக்கு முது கலை மாணவர்கள் வகுப்பு எடுத்தனர். இந்நிலையில், போராட்டம் தொடர்பாக சிதம்பரம் ரகசியம்-2 என்ற தலைப்பில் இன்று (ஜன.26) சில ரகசியங்களை வெளியிட உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட் டுள்ள மாணவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த நோட்டீஸ் சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, சிதம் பரம் உள்ளிட்ட நகரங்களில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in