மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு முற்றுகை போராட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி 32-வது வார்டில் குடிநீர் வழங்க வலியுறுத்தி  மண்டல அலுவலகம் முன் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்திய  பொதுமக்கள். 							   படம்: மு.லெட்சுமி அருண்
திருநெல்வேலி மாநகராட்சி 32-வது வார்டில் குடிநீர் வழங்க வலியுறுத்தி மண்டல அலுவலகம் முன் காலி குடங்களுடன் முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்கள். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சி32-வது வார்டில் குடிநீர் வழங்கவலியுறுத்தி அப்பகுதி மக்களும், எஸ்டிபிஐ கட்சியினரும்மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாநகராட்சி 32-வதுவார்டு ராவுத்தர் கீழத்தெருவில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால்அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதிபெண்கள், எஸ்டிபிஐ கட்சி மாநகர் மாவட்டச் செயலாளர் புகாரிசேட், தொழிற்சங்க மாவட்டபொருளாளர் செய்யது மைதீன் உள்ளிட்டோர் மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சிமண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். விரைவில் குடிநீர் வசதி செய்துதருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in