வேலூர் முத்துரங்கம் கல்லூரியில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு

வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.
வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி ஏற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.
Updated on
1 min read

வேலூர் முத்துரங்கம் அரசினர் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்றதுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர்.

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு என்.எஸ்.எஸ். அலுவலர்கள் வெங்கடேஷ், தமிழ்செல்வன், வாடாமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து உறுதி மொழி ஏற்றனர்.

தொடர்ந்து, தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு கோலப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் மலர் பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணியை கல்லூரி முதல்வர் தொடங்கி வைத்தார். இதில், பங்கேற்ற மாணவ, மாணவிகள் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in