குடியரசு தினவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

குடியரசு தினவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Updated on
1 min read

குடியரசு தினவிழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நாளை குடியரசு தினவிழா நடைபெறுகிறது. ஆட்சியர் அண்ணாதுரை தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.

குடியரசு தின விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவையொட்டி எஸ்பி ராதாகிருஷ்ணன் தலைமையில் 800 போலீஸார் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களாக மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தினவிழாவையொட்டி, அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறை கட்டுப்பாட்டில் விழுப்புரம் மாவட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in