Published : 25 Jan 2021 03:15 AM
Last Updated : 25 Jan 2021 03:15 AM

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆலோசனை

கடலூரில் தமிழக மக்கள் ஒற் றுமை மேடையின் கடலூர் மாவட்டஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். ஒற்றுமை மேடை கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் வர வேற்று பேசினார். திமுக மாநிலதேர்தல் பணிக்குழு செயலாளர் இளபுகழேந்தி, நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் மாநில செயலா ளர் வழக்கறிஞர் சந்திரசேகர், திராவிடர் கழக மாவட்ட செயலா ளர் சிவக்குமார், மதிமுக நகர செயலாளர் ஐயப்பன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நகர செயலாளர் செந்தில், மாநிலதுணை செயலாளர் தர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் அமர்நாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடலூர் மாவட் டத்தில் பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்வதுஎன்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x