போலீஸ் அனுமதியின்றி வேன் யாத்திரை சென்ற நடிகர் கருணாஸ் திண்டிவனத்தில் தடுத்து நிறுத்தம்

போலீஸ் அனுமதியின்றி  வேன் யாத்திரை  சென்ற   நடிகர் கருணாஸ் திண்டிவனத்தில் தடுத்து நிறுத்தம்
Updated on
1 min read

போலீஸ் அனுமதியின்றி வேன் யாத்திரை சென்ற நடிகர் கருணாஸ் திண்டிவனத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.

முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரான நடிகர் கருணாஸ் எல்எம்ஏ, "தேசியமும் தெய்வீகமும்" என்ற வாகன யாத்திரையை சென்னையில் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு நேற்று புறப்பட்டு சென்றார். இந்த யாத்திரைக்கு விழுப்புரம் மாவட்ட போலீஸார் அனுமதி மறுத்தனர். மாவட்ட எல்லையான திண்டிவனத்தில் கருணாஸ் வந்த வேனை போலீஸார் நேற்று தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர் மறியலில் ஈடுபட்ட முயன்றனர்.

யாத்திரை வேனுக்கு அனுமதி கிடையாது. ஆனால் காரில் செல்லாம் என போலீஸார் தெரிவித்தனர். யாத்திரை வேனை சென்னைக்கு திருப்பி அனுப்பிய கருணாஸ் மற்றும் அவரது கட்சியினர் காரில் ராமநாதபுரம் புறப்பட்டுச் சென்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in