திருவாரூர் அருகே ரவுடி கொலை

திருவாரூர் அருகே ரவுடி கொலை
Updated on
1 min read

திருவாரூர் அருகே பள்ளிவா ரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம் மகன் மகாராஜா(32). ரவுடியான இவர், கொலை முயற்சி வழக்கு ஒன்றில் சிறைக்குச் சென்று சில நாட்களுக்கு முன்னர் ஜாமீனில் வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிவாரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள திடலில் நேற்று முன்தினம் இரவு மகாராஜா கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி விஷ்ணுபிரியா அளித்த புகாரில், பள்ளிவாரமங்கலம் சரவணன், குரும்பேரி ராமச்சந்திரன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தனது கணவரை கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

கொலை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.துரை கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in