வந்தவாசி அருகே விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு
Updated on
1 min read

வந்தவாசி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கோவில்குப்பம் சாத்தனூர் கிராமத்தில் வசித்தவர் முத்து மனைவி சின்னக்குழந்தை(76). இவரது உறவினர் பன்னீர்செல்வம் மனைவி பச்சையம்மாள்(45). இவர்கள் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தனர். இதையொட்டி, அவர்கள் இருவரையும் பச்சையம்மாள் மகன் சங்கர் என்பவர், வந்தவாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். சளுக்கை கூட்டுச்சாலை அருகே வந்தபோது, சங்கர் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மீது கீழ்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் பாக்கியராஜ் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் சங்கர் மற்றும் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சின்னகுழந்தை உயிரிழந்தார். மேலும், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பச்சையம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். சங்கர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in