திருப்பூரில் காங். சாலை மறியல்

திருப்பூரில் காங். சாலை மறியல்
Updated on
1 min read

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக பதாகைமற்றும் கொடிகள் கட்டுவதை போலீஸார் தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. அதையும் மீறி அவிநாசி சாலை புஷ்பா திரையரங்கம் அருகே வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகையை, நேற்று அதிகாலை போலீஸார் அகற்ற முயன்றதாக தெரிகிறது.

அங்கு திரண்ட மாநகர்மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமையிலான காங்கிரஸார், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பதாகை அகற்றப்படாது எனஎன தெரிவித்ததையடுத்து, போராட்டம் முடிவுக்கு வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in